tag:blogger.com,1999:blog-7052668157656299237.post2639625357819625307..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: தமிழே ! என் தமிழே !!மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91467712817715257272011-10-22T03:13:48.513+05:302011-10-22T03:13:48.513+05:30அருமையான வாசிப்பனுபவத்தைத் தந்தது. எனக்கும் ஜெயகாந...அருமையான வாசிப்பனுபவத்தைத் தந்தது. எனக்கும் ஜெயகாந்தனுடைய கதையைப் படிப்பது போலிருந்தது. டேவிட்டுடைய எளிமையான தத்துவத்தையும், அதை வெளிக்கொணரச் செய்த உங்களுடைய எளிமையான பழகுதலையும் படித்து மிகவும் மகிழ்ந்தேன். இந்தியாவுக்கு வரும்பொழுதெல்லாம் உயர்கல்வி படித்தவர்களும், உயர் பதவியிலிருப்பவர்களும் காட்டுகிற வெட்டி பந்தாவை (மமதை!) நினைத்தால் அருவருப்பாகவே இருக்கும். இந்தியாவிலிருந்தவரை இது தெரிந்தாலும் அப்பொழுது அதிகம் உறுத்தலாகத் தெரியவில்லை. இதற்கு விதிவிலக்கானவர்கள் உங்களைப் போன்றவர்கள்.<br /><br />நன்றி - சொ.சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-82141671841233963982011-03-01T21:58:37.657+05:302011-03-01T21:58:37.657+05:30நன்றி இராஜராஜேஸ்வரி!நன்றி இராஜராஜேஸ்வரி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-89801127696841474942011-03-01T10:09:21.463+05:302011-03-01T10:09:21.463+05:30Very interesting post& comments.Very interesting post& comments.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-6289167727930653822010-11-20T22:46:44.214+05:302010-11-20T22:46:44.214+05:30ஆ.ஆர்.ஆர்.ஜி , ரொம்பவே உயர்ந்த வாழ்த்து உங்கள் வாழ...ஆ.ஆர்.ஆர்.ஜி , ரொம்பவே உயர்ந்த வாழ்த்து உங்கள் வாழ்த்து! ஜே.கே எனக்கும் ஆதர்ச எழுத்தாளர். என் சொந்த ஊரான கடலூரைச் சேர்ந்தவர். தமிழின் நவீன இலக்கியத்தில் அவருக்கு அசைக்க முடியாத இடம் உண்டு.அவரை நேரில் சந்தித்த சில தருணங்களை நெஞ்சின் பொக்கிஷ அறையில் சேமித்து வைத்திருக்கிறேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஜி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-13829367071888588232010-11-19T22:21:50.163+05:302010-11-19T22:21:50.163+05:30ஆஹா..அருமை..ஒரு ஜெயகாந்தன் கதை படிப்பது போன்ற அவ்வ...ஆஹா..அருமை..ஒரு ஜெயகாந்தன் கதை படிப்பது போன்ற அவ்வளவு நேர்த்தி!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-4264541827016027562010-10-03T08:23:30.753+05:302010-10-03T08:23:30.753+05:30அண்ணா... நன்றி...அண்ணா... நன்றி...RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-61529781280140212242010-10-02T23:34:46.386+05:302010-10-02T23:34:46.386+05:30உங்கள் பாராட்டு அன்பின் வெளிப்பாடாகவே கருதுகிறேன்....உங்கள் பாராட்டு அன்பின் வெளிப்பாடாகவே கருதுகிறேன். நன்றி. உங்கள் எழுத்து செம்மையாகவே இருக்கிறது. தமிழ் தன்னையே எழுதிக் கொள்ளும்.நம்மை அதனிடம் ஒப்புக் கொடுத்து விட வேண்டும் என்று தான் எனக்கு தோன்றும்.உங்கள் எழுத்தை,அதன் நையாண்டியை,நகைச்சுவையை மிக ரசிக்கிறேன்.. மேலும் எழுதுங்கள் அன்பு ஆர்.வீ.எஸ் !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-50363390133661804512010-10-02T21:07:52.802+05:302010-10-02T21:07:52.802+05:30//"தக்க அதற்கு நிற்க'முயல்வேன். நன்றி! //...//"தக்க அதற்கு நிற்க'முயல்வேன். நன்றி! //இந்தத் தமிழில் சொக்கி நிற்கிறேன். கணினி மொழி பிரதானமாக இருந்த என் வாழ்க்கையில் சமீப காலமாக தாய் மொழி ஆட்சி செய்கிறது. பார்க்கலாம், நீங்கள், அப்பாதுரை, பத்மநாபன் போன்ற சொல்லாளர்கள் போல எழுதமுடியுமா என்று.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-37759954451616824122010-10-01T18:11:16.376+05:302010-10-01T18:11:16.376+05:30நீங்கள் நெகிழ்ச்சியுடன் இட்ட கருத்து என்னையும் மிக...நீங்கள் நெகிழ்ச்சியுடன் இட்ட கருத்து என்னையும் மிக நெகிழ்வுறச் செய்கிறது. பணியின் நிமித்தத்திலும் ஆர்வத்திலும் ஐந்தாறு மொழிகளில் நல்ல பயிற்சி இருந்தாலும்,தமிழுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறேன்.<br />"சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும்..என் சாம்பலும் தமிழ் மணம் கமழ வேண்டும்" என்றானே புரட்சிக் கவி. அவை வெறும் வரிகளல்ல. தமிழை நன்கு ஒதியுணர்ந்த யாரும் இந்த உணர்வே பெறுவர்.<br />ஆனாலும் பிற மொழிகளும் ரசனைக்குரியவையே. தாய்க்கும்,மச்சினிக்கும் உள்ள வித்தியாசம் அது..<br /><br /> //நான் படித்த இடுகைகளில் சிறந்த இடுகைகளில் ஒன்று. இடுகையா கண்ணாடியா என்று வியக்கிறேன்.<br />வாழ்த்துக்கள்.//<br />பெரிய பொறுப்பைச் சுமத்தி விட்டீர்கள்."தக்க அதற்கு நிற்க'முயல்வேன். நன்றி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-20554122821003579582010-10-01T16:46:52.235+05:302010-10-01T16:46:52.235+05:30எண்பதுகளில் தமிழைத் துறந்தவன் இரண்டாயிரத்து மூணு வ...எண்பதுகளில் தமிழைத் துறந்தவன் இரண்டாயிரத்து மூணு வாக்கில் திரும்பிப் பார்த்தேன். தமிழ் பொலிவோடு இருந்தாள். நான் தான் துருப்பிடித்திருந்தேன். 'வாழ்க்கையிலே மனை, செல்வம், சுற்றம் எல்லாம் இரண்டாம் தட்டு தான். மொழியும் இலக்கியமும் தான் முதல் தட்டு' என்று என்னைத் தலையிலடித்து திருப்பிக் கொண்டு வந்து தமிழிடம் சேர்த்தார் என் நண்பர்/ஆசிரியர் அரசன். 'ஏன் கைவிட்டேன், எங்கே போனேன்' என்று ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் என்னைச் சேர்த்துக் கொண்டாள் தமிழ். உங்கள் பதிவைப் படித்ததும் அரசனை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.<br /><br />சில சமயம் நேராக நடக்கிறோம்; சில சமயம் குறுகலாக நடக்கிறோம். பாதை என்னவோ ஒரே மாதிரி தான் இருக்கிறது. நேர்வழியும் கோணலும் நெஞ்சுக்குள்ளே தானே? எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-27191924403805994012010-10-01T16:35:02.183+05:302010-10-01T16:35:02.183+05:30நான் படித்த இடுகைகளில் சிறந்த இடுகைகளில் ஒன்று. இ...நான் படித்த இடுகைகளில் சிறந்த இடுகைகளில் ஒன்று. இடுகையா கண்ணாடியா என்று வியக்கிறேன்.<br />வாழ்த்துக்கள்.<br /><br />//எல்லாம் இருக்கு சார். ஆனா ஒண்ணுமே இல்ல<br />'ஒண்ணுமில்லே, ஆனா எல்லாமிருக்கு' கண்ணோட்டம் என்றைக்கு வரும் எனக்கு?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-35582547293309625522010-09-29T21:13:53.217+05:302010-09-29T21:13:53.217+05:30வாங்க ராஜநடராஜன்! முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்...வாங்க ராஜநடராஜன்! முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! இந்தப் பதிவில் கொஞ்சமும் யோசிக்க சிரமப் படவில்லை.. நடந்ததை ஒரு பார்வையாளனாகவே பதிவு செய்தேன்.. மற்ற பதிவுகளையும் பார்த்து உங்கள் கருத்துக்கள் தெரிவியுங்களேன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-11894158300464424602010-09-29T21:04:28.981+05:302010-09-29T21:04:28.981+05:30முதல் வருகை!கண்ணுல பட்டது!எழுத்துல யதார்த்தம்.முதல் வருகை!கண்ணுல பட்டது!எழுத்துல யதார்த்தம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-76500311018969084272010-09-28T01:05:36.942+05:302010-09-28T01:05:36.942+05:30நான் நலமே ஜி. தங்கள் நலனையும் அறிய ஆவல்.நான் நலமே ஜி. தங்கள் நலனையும் அறிய ஆவல்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-11049729400110485962010-09-27T20:14:04.832+05:302010-09-27T20:14:04.832+05:30உங்கள் அழகான பின்னூட்டத்திற்கு நன்றி ஆர்.வீ.எஸ்,.வ...உங்கள் அழகான பின்னூட்டத்திற்கு நன்றி ஆர்.வீ.எஸ்,.வாழ்க்கை ரொம்ப அழகானது தோழரே! வாழ்வின் வழியெங்கும் பலவித புஷ்பங்கள். தாமரையும், ரோஜாவும் மல்லியும் மட்டுமே மலர்கள் என நின்று விடுகிறோம்.மூக்குத்திப் பூவும், தும்பையும்,எருக்கும், ஊமத்தையும் கூட உற்று நோக்கினால் அழகானவையே. அழகு பூவில் இல்லை,கண்ணிலும்,அதைவிட மனதிலுமே அல்லவா இருக்கிறது? <br />உங்கள் ஊரில் கண்ட பெரியவரை பற்றி நீங்கள் <br />எழுதுங்களேன்.. உங்கள் பாராட்டு என்னை இன்னும் எளியவனாக்கட்டும்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-38760668722380476262010-09-27T12:01:47.962+05:302010-09-27T12:01:47.962+05:30//இந்த நிமிட்டு நான் ராஜா சார். பெரிய பதவில இருக்க...//இந்த நிமிட்டு நான் ராஜா சார். பெரிய பதவில இருக்கிற மேனேஜர் எனக்காக சமைச்சு வயிறார போட கர்த்தரு இன்னிக்கு ஆசீர்வதிச்சிருக்குறாரு. //<br />பெரிய பெரிய மானேஜ்மென்ட் 'குரு'க்கள் சொல்லும் வாழ்க்கை தத்துவத்தை சங்கம் வளர்த்த மதுரத் தமிழில் செப்பிய டேவிட் ஒரு குரு. சம்சாரத்தையும் லாரியையும் பற்றி சொன்ன போது லாரியை புளிய மரத்தில் ஏத்த மாட்டேன் என்றுதான் சொன்னானே தவிர, புளிய மரத்தில் இருக்கும் சம்சாரம் என்று சொல்லவில்லை. அவ்வளவு அன்பு. இப்படி படிக்காத மேதைகள் நம்மிடம் நிறைய பேர் உண்டு. அழுக்காக, அசிங்கமாக இருப்பதால் நிறைய பேர் பக்கத்தில் செல்ல கூசுகிறார்கள். தமிழால் அவர்களை அணுகி உணவு உபசரிப்பு செய்து கொண்டாடி மகிழ்ந்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீங்கள் ஒரு தமிழ்ஜி.<br /><br />எங்களூரில் ஒரு தாடி வைத்த பெரியவர் இருந்தார். இடுப்பில் காவி வேஷ்டி. பிச்சைகாரரோ, சந்நியாசியோ கிடையாது. குடும்பம் குட்டி பேரன் பேத்தி எல்லாம் உண்டு. ஏதோ சின்ன கடையில் வேலை செய்து வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கிக் கொண்டுவிட்டார். எதைக்கேட்டாலும் முதலில் தும்பைப் பூ நிற முன்பல் தெரிய சிரிப்பார். திட்டினால் கூட. அப்புறம் தான் பேசவே ஆரம்பிப்பார். இது ஒரு தத்துவம். சிரிப்பாலஜி. It was Highly contagious. உடனே நமக்கும் பத்திக்கும். பாதி நேரம் மேல் துண்டோடு தான் பார்க்கலாம். மாரியம்மன் கோயில், அரச மரத்தடி, அய்யனார் குட்டை என்று பல இடங்களில் பல பேரோடு பேசி பார்த்திருக்கிறேன். எல்லா முறையும் அவரின் சிரித்த மூஞ்சிதான் தெரியும். அவரிடம் இருந்து கற்றது, முதலில் கோபப்படாமல் எதிராளி என்ன சொல்கிறான் என்பதை பொறுமையாகவும், நிதானமாகவும் கேட்க வேண்டும் என்பதை. நிதானமாக பேசுவார். நான் இன்னும் இதுபோன்ற நிலைக்கு வரவில்லை. இருந்தாலும் முயலுவதற்கு அவர்தான் அடித்தளம் போட்டார்.<br /><br />மனித மனங்களை நோண்டி நொங்கு எடுத்திருக்கிறீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை.<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-29545609981300202572010-09-26T12:08:32.468+05:302010-09-26T12:08:32.468+05:30வாங்க பாலா! உங்கள் ரசனைக்கு என் சலாம்!வாங்க பாலா! உங்கள் ரசனைக்கு என் சலாம்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-18209778315569359922010-09-26T11:31:05.461+05:302010-09-26T11:31:05.461+05:30ரசிச்சு படிச்சேன் சார் :)ரசிச்சு படிச்சேன் சார் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-22871648022641649972010-09-26T11:30:37.088+05:302010-09-26T11:30:37.088+05:30//லாரியின் உறுமல் கூட தமிழில் ஒலித்தது//
ப்ளாக் க்...//லாரியின் உறுமல் கூட தமிழில் ஒலித்தது//<br />ப்ளாக் க்யுமர் சார்.. அட்டகாசம்...<br /><br />//எனக்கா? ரெண்டு பசங்க, ஒரு பொண்டாட்டி//<br />ஹா ஹா.. தலைவரே செம :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-467889479503621752010-09-26T09:35:04.552+05:302010-09-26T09:35:04.552+05:30கருத்துக்கு ரொம்ப நன்றி ஆதிரா.நலம் தானா?கருத்துக்கு ரொம்ப நன்றி ஆதிரா.நலம் தானா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-50697758861368845792010-09-26T09:29:30.967+05:302010-09-26T09:29:30.967+05:30பகட்டு இல்லாத படாடோபம் இல்லாத போதிமரம் தராத ஒரு சத...பகட்டு இல்லாத படாடோபம் இல்லாத போதிமரம் தராத ஒரு சதாரன மனித சாதி மரம் போதித்த உண்மைத் தத்துவம். படிக்க மட்டும் இல்லை பழகிடின் வாழ்வை ரசிக்க, ருசிக்க இனிமை தரும் என்பதே உண்மை..எளிமையான உங்கள் எழுத்தில் இன்னும் சுவை சேர்க்கிறது ஜி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-86061161824829006702010-09-26T08:58:21.163+05:302010-09-26T08:58:21.163+05:30வாங்க ஹேமா.நன்றாகச் சொன்னீர்கள். அனுபவத்தை விட பெர...வாங்க ஹேமா.நன்றாகச் சொன்னீர்கள். அனுபவத்தை விட பெரிய ஆசிரியன் உண்டா? அனுபவம் தமதாகிலும்,பிறருடையதாகிலும் அவை சொல்லும் போதனைகள் பல. கருத்துக்கு நன்றி ஹேமா.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-71625072864892223972010-09-26T08:52:56.157+05:302010-09-26T08:52:56.157+05:30தாம்பத்தியம் என்பது வாழ்வின் ஆதார சுருதி. அந்த சுர...தாம்பத்தியம் என்பது வாழ்வின் ஆதார சுருதி. அந்த சுருதியில் கணவனும் மனைவியும் இணைந்து மேற்கொள்ளும் சேர்ந்திசையில் அபஸ்வரங்கள் கூட, புதுப் புது ஜென்யங்களாய் உருமாறும் அல்லவா? நல்ல புரிதலும், அனுசரிப்பும் வாய்த்த தம்பதிகள்,நாளும் தம்மைப் புதுப்பித்து கொண்டு,காதல் பறவைகளாய் அல்லவா வாழ்கிறார்கள்? அதே சமயம் சின்னச் சின்ன முரண்பாடுகள் வாழ்க்கைக்கு இன்னும் சுவாரஸ்யம் கூட்டுகிறது. பிரச்சினை என்னவென்றால், மென்னுளி கொண்டு தட்டி சமன்செய்ய வேண்டிய தங்கக் கம்பியை,பல சமயம் சம்மட்டிக் கொண்டல்லவா அடித்து விடுகிறோம் பத்மநாபன் ?<br /><br />மற்றபடி மேலாளர்,முதுநிலை மேலாளர் எல்லாம் கடந்து,தற்சமயம் மேலாளர்களுக்கு,வங்கிக கடன் முறைகளையும்,மனவியலையும் போதிக்கும் பேராசிரியப் பணியில், நிரம்பப் பேசிக் கொண்டிருக்கிறேன்.(அதனால் வீட்டில் வாய் திறப்பதில்லை!!)மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91961514444126435422010-09-26T02:25:28.318+05:302010-09-26T02:25:28.318+05:30நிறையப் புத்தகங்கள் படித்தவர்களை அனுபவப் படுபவர்கள...நிறையப் புத்தகங்கள் படித்தவர்களை அனுபவப் படுபவர்கள் சொல்லும் வாழ்வின் தத்துவங்கள் இயல்பாய் எங்களுக்கு உபயோகமானதாய் இருக்கும் மோகன்ஜி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-16668676887200734712010-09-26T00:00:30.233+05:302010-09-26T00:00:30.233+05:30மிக அருமை மேலாளாரே ... அட்டகாசமா இருந்தது..... வாழ...மிக அருமை மேலாளாரே ... அட்டகாசமா இருந்தது..... வாழ்க்கையை அருமையாக பேசினார் ஒட்டுனர்... <br /><br /> முந்தயபதிவு பின்னூட்டத்தில் மனவியய நகைச்சுவைக்கு அப்புறம் பின்னூட்ட பின்னூட்டமாக இப்படி பின்னூட்டமிட இருந்தேன் `` ஒரு நாள் சண்டயில்லாமல் இருந்தாலும் நமநமப்பு , அதே நமநமப்பு அரை நாள் பிரிந்தாலும் ,,,, இதவிட மிக அழகாக டேவிட் சொன்னது அந்த பின்பின்னூட்டத்திற்கு அவசியமில்லாமல் செய்துவிட்டது.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com