tag:blogger.com,1999:blog-7052668157656299237.post4103847898127178592..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: கல்யாணியை கடித்த கதைமோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-34744404678277778262016-03-02T18:36:36.055+05:302016-03-02T18:36:36.055+05:30//தங்கிவிட்ட பற்கள் தந்த உணர்வு சொல்ல இயலாதது.//
...//தங்கிவிட்ட பற்கள் தந்த உணர்வு சொல்ல இயலாதது.//<br /><br />ஒருவேளை மோகி அதைப் புரிந்து கொண்டும் ஏதும் செய்ய இயலாமல் விலகி இருந்தால்! அப்போது மோகியின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்? கல்யாணியைப் பார்த்ததும் கடித்த பற்கள் தங்கி இருப்பது நினைவில் வந்திருக்குமா? என்ன நினைத்திருப்பார்?<br /><br />ஆனால் இப்போது மோகிக்கு ஈர்ப்பு இல்லை என்று சொல்வது கொஞ்சம் கடுமையாகத் தெரிந்தாலும் அவர் நிலைமை அப்படி! ஆனால் கல்யாணி தான் பாவம்! :( அவள் கணவன் அவளைப் புரிந்து கொண்டவனா? எத்தனை எத்தனை எண்ணங்கள் தோன்றுகின்றன! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-52717032138238253412016-03-02T17:51:59.728+05:302016-03-02T17:51:59.728+05:30மோகி வரையில் அந்த சம்பவத்தின் நினைப்பும்,பாலியசிநே...மோகி வரையில் அந்த சம்பவத்தின் நினைப்பும்,பாலியசிநேகிதத்தின் ஈர்ப்புமன்றி ஏதும் இல்லை என்று அறிவேன்... தங்கிவிட்ட பற்கள் தந்த உணர்வு சொல்ல இயலாதது. மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-90301689112985927102016-03-02T16:42:40.784+05:302016-03-02T16:42:40.784+05:30இந்தக் கதையில் உள்ள உபகதை! :)))))இந்தக் கதையில் உள்ள உபகதை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-19896959439441687642016-03-02T16:42:18.411+05:302016-03-02T16:42:18.411+05:30அப்பாதுரை கூறி இருப்பது போல் நானும் ஒரு சாதாரண மனு...அப்பாதுரை கூறி இருப்பது போல் நானும் ஒரு சாதாரண மனுஷி தான்! என் குழந்தைகளிடம் கோபம் உண்டு! அன்பும் உண்டு! கண்டிப்பும் உண்டு! அடிப்பதும் பின்னர் வருந்துவதும் உண்டு. இப்போதுகூடக் குழந்தைகள் சொல்லிக் கேலி செய்வார்கள். ஆனால் அதற்காக மனதார வருந்தி இருக்கிறேன். என்னைத் தண்டித்துக் கொண்டதெல்லாம் இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-41616992819666736882016-03-02T16:40:22.675+05:302016-03-02T16:40:22.675+05:30கல்யாணிக்கும் மோகிக்கும் இடையே இருப்பது வெறும் நட்...கல்யாணிக்கும் மோகிக்கும் இடையே இருப்பது வெறும் நட்பா? இல்லைனு நினைக்கிறேன். மெல்லிய மயிரிழை போன்ற தூரத்தில் அன்பு நின்று விட்டது! ஒருவருக்கொருவர் மனதைப் பகிராமல் இருந்தது தான் காரணமா? அல்லது இருவருமே உணரவில்லையா? இப்போது மறுபடி கல்யாணியைப் பார்க்கையில் மோகிக்குப் புரிந்திருக்குமோ? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-73342645833630520582016-03-02T16:38:47.853+05:302016-03-02T16:38:47.853+05:30இதிலே ஏற்கெனவே கருத்துச் சொல்லி இருக்கும் "கீ...இதிலே ஏற்கெனவே கருத்துச் சொல்லி இருக்கும் "கீதாக்கள்" நான் இல்லை. ஒருவர் கீதா சந்தானம்! இன்னொருவர் வெறும் கீதா! :)நான் மோகியைக் குறித்து இன்று தான் படிக்கிறேன். எங்கே அம்மா ஊரிலிருந்து வந்ததும் அவங்க கிட்டேக் கல்யாணியின் பெற்றோர் மறுபடியும் வந்து விசாரிப்பாங்களோனு கடைசி வரைக்கும் பயம்மா இருந்தது. ஆனால் அவங்களும் அதோட விட்டுட்டாங்க! சித்தியும் நல்ல சித்தி! யாருக்கும் கிடைக்காத சித்தி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-24284204763589322682012-04-08T07:13:06.526+05:302012-04-08T07:13:06.526+05:30அழைப்பிதழ்:
உங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்த...அழைப்பிதழ்:<br /><br />உங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்தில் “ஞாழல் பூ - அனுபவச்சரம்” என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன். <br /><br />http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_08.html<br /><br />நேரம் இருக்கும் போது வந்து பார்வையிட அழைக்கிறேன்.<br /><br />நட்புடன்<br /><br />வெங்கட்.<br />புது தில்லி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-15920774042474885942011-05-28T07:50:06.472+05:302011-05-28T07:50:06.472+05:30படிப்பறிவற்ற அம்மாக்கள் என்றில்லை மோகன்ஜி. படிப்ப...படிப்பறிவற்ற அம்மாக்கள் என்றில்லை மோகன்ஜி. படிப்பறிவற்ற அம்மாக்களுக்காவது படிப்பறிவில்லை என்ற போலி சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். படித்த, மெத்தப் படித்த, அம்மாக்களின் கொடுமைகளும் நிறைய பார்க்கிறோம். (பார்க்கிறேன்). அம்மா என்றால் தெய்வம் என்றும் அப்பா என்றால் வேறே என்றும் சொல்கிறோம் - or in my case, உல்டா. தாயின் எந்தச் செயலையும் கருணைமழையே மேரிமாதா என்று பார்ப்பதை ஒப்பவில்லை. அவ்வளவுதான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-24801093958369521162011-05-28T05:07:25.882+05:302011-05-28T05:07:25.882+05:30தாய்மை என்பது ஒரு கோட்பாடு என்று நினைக்கிறேன்.தாய்மை என்பது ஒரு கோட்பாடு என்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-75165923872730483022011-05-28T05:03:34.389+05:302011-05-28T05:03:34.389+05:30சூடுங்கற பேச்சே இல்லேன்னு உத்தரவாதம் வேணும் மோகன்ஜ...சூடுங்கற பேச்சே இல்லேன்னு உத்தரவாதம் வேணும் மோகன்ஜி. அப்ப்த்தான்.. :)<br /><br />எங்கம்மா இந்த மாதிரி பேச்செல்லாம் கூட எடுக்க மாட்டாங்க. 'மரமண்டை'னு திட்டியிருந்தா அதுவே ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. எல்லாத்துக்கும் சேத்து வச்சு எங்கப்பன் பின்னிட்டான்.. விடுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40042136197802764812011-05-28T05:00:22.069+05:302011-05-28T05:00:22.069+05:30கொஞ்சம் ஏமாந்தால் மிளகாய் அரைக்கிறீங்களோ மீனாக்ஷி?...கொஞ்சம் ஏமாந்தால் மிளகாய் அரைக்கிறீங்களோ மீனாக்ஷி? :) ஒரு வேகத்தில் சூடு வைக்கணும்னா தனக்கு வைத்துக் கொள்வது தானே? பிள்ளைக்கு வைத்து பிள்ளையின் துடிப்பில் தன் மனம் கலங்கியதை தனக்குக் கிடைத்த தண்டனை என்பதா? தனக்கு சூடு வச்சுக்கிட்டாலும் தண்டனை தானுங்களே? தனக்குப் பசிச்சா பிள்ளைக்கு சாப்பாடு போடுவாங்களா தாயி? <br /><br />(ஏதோ தெரியாம எழுதிட்டீங்க, விடுங்க; நானும் தெரியாம படிச்சுட்டேன்:)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-14039242865124084002011-05-27T22:31:31.145+05:302011-05-27T22:31:31.145+05:30மீனாக்ஷி மேடம்!
உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும்...மீனாக்ஷி மேடம்!<br />உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது இன்னமும் கூர்மையாய் நான் எழுத வேண்டும் என சங்கல்பம் செய்துகொள்ளத் தோன்றுகிறது <br /><br />//நமது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருடனும் ஒரு கதை தொடங்குகிறது. இதில் சிறுகதையாய் பல நடைமுறையில் முடிந்தாலும், தொடர்கதையாய் சில மனதில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இல்லையா!//<br /><br />அற்புதமாய் சொல்கிறீர்கள்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-74713948159647148532011-05-27T22:28:01.527+05:302011-05-27T22:28:01.527+05:30ப்ரிய சாய்!
//அப்பப்போன்னு//That says it all !
அழ...ப்ரிய சாய்!<br />//அப்பப்போன்னு//That says it all ! <br />அழகு தலைவரே.. ரொம்ப அழகுமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-52988408229800030322011-05-27T22:25:32.045+05:302011-05-27T22:25:32.045+05:30அன்பு அப்பாதுரை சார்!
//விட்டுப்போன வசனம் தான் கத...அன்பு அப்பாதுரை சார்!<br /><br />//விட்டுப்போன வசனம் தான் கதையே மோகன்ஜி!//<br /><br />அற்புதமாய் சொல்லியிருக்கிறீர்கள்.அதனாலே தான் கதையில் சேர்க்கவில்லை.<br />விட்டுப்போன வசனம்... பலமுறை இந்த வார்த்தைகளை மந்திர உச்சாடனம் போல் சொல்ல வைத்துவிட்டீர்கள் என்ன பெத்த ராசாவே !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-69560698937392391082011-05-27T22:20:18.792+05:302011-05-27T22:20:18.792+05:30அன்பு அப்பாதுரை! ஒரு தாய் தன் குழந்தையை தன்னில் ஒர...அன்பு அப்பாதுரை! ஒரு தாய் தன் குழந்தையை தன்னில் ஒரு பகுதியாய்,தானேயாய் எண்ணுதல் இயல்பே. சூடு என்பது பெரும்பாலும் ஒரு மிரட்டலாகவே தாய்மார்களால் கைகொள்ளப் படுகிறது. தாளமுடியாத குடைச்சல் தரும் பிள்ளைகள் சூடுவாங்குவதும் உண்டு. அது தாயின் வெறுப்பாலா என்ன? பிள்ளையை திருத்துவதாய் எண்ணி படிப்பறிவற்ற சில அம்மாக்கள் மேற்கொள்ளும் வன்முறை வெளிப்பாடு அது. நான் அதை நியாயப் படுத்தவில்லை.<br /><br />இயலாமையும் ஏழ்மையும் சூழ்ந்து ,வாழ்வே ஒரு பெரும் சுமையாய்ப்போகும் போது மேற்கொள்ளப் படும் தற்கொலைகளை எண்ணிப் பார்க்கிறேன். அந்த சூழலில் ஆண் தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வான். பெண்ணோ,தன்னோடு தன் இளம் குழந்தைகளையும் சேர்ந்தல்லவா மாய்க்கிறாள்? அது வெறுப்பு என்பதைவிட, தன் குழந்தைகள் அனாதைகளாய் கஷ்டப்படக் கூடாதே என்று ஒரேமுறை பெறும் கஷ்டம் கொடுக்கிறாளோ என்று தோன்றுகிறது.<br /><br />தாய்மை என்பது ஒரு கொள்கையோ கோட்பாடோ அல்லவே.. மிக மென்மையான அந்த உணர்வை புரிய வைக்க இயலாது. உணர வேண்டுமெனில் ஒரு தாயாய் பிறவி எடுக்கவேண்டும். நான் அப்படி தாயாய் பிறப்பெடுத்தால் உம்மை என் பிள்ளையாய்ப் பெற்றுக் கொள்கிறேன். ஆனால் சூடு போடுவேனா இல்லையா என்று உத்தரவாதமெல்லாம் கொடுக்கமாட்டேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-54917533706098700322011-05-27T07:46:42.643+05:302011-05-27T07:46:42.643+05:30சொல்லி சொல்லாததை, இப்பொழுது சொல்லி கண்கலங்க வைத்...சொல்லி சொல்லாததை, இப்பொழுது சொல்லி கண்கலங்க வைத்துவிட்டீர்களே மோகன்! நமது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருடனும் ஒரு கதை தொடங்குகிறது. இதில் சிறுகதையாய் பல நடைமுறையில் முடிந்தாலும், தொடர்கதையாய் சில மனதில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இல்லையா!<br /><br />கல்யாணி பூமாவிற்கு போட்ட சூடு ஒரு வேகத்தில்தான் என்று எழுதி இருக்கிறேன், வேண்டுமென்றே இல்லை அப்பாதுரை. அந்த குழந்தை எரிச்சலால் துடித்திருந்த நேரத்தில், கல்யாணியின் மனமும் வேதனையில் அதைவிட பல மடங்கு எரிந்திருக்கும் அல்லவா! இதைதான் நான் தண்டனை என்று சொன்னேன். ஒரு வேகத்தில் போட்டால் என்ன! இல்லை வேண்டுமென்றே போட்டால் என்ன! சூடு சூடுதானே! நீங்கள் எழுதி இருப்பது சரிதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-33175468423643953152011-05-27T02:12:45.701+05:302011-05-27T02:12:45.701+05:30//அப்பப்போன்னு//
That says it all !//அப்பப்போன்னு//<br /><br />That says it all !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40626548619860439292011-05-27T00:18:06.575+05:302011-05-27T00:18:06.575+05:30விட்டுப்போன வசனம் தான் கதையே மோகன்ஜி!விட்டுப்போன வசனம் தான் கதையே மோகன்ஜி!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-47321843947962828282011-05-27T00:15:39.878+05:302011-05-27T00:15:39.878+05:30தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட தண்டனை தன் கையில் அ...தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட தண்டனை தன் கையில் அல்லவா இருக்க வேண்டும்? பிள்ளைக்குச் சூடு போட்டு விட்டு தனக்குக் கொடுத்த தண்டனையா? சரி தான்!! <br /><br />தவறாக நினைக்க வேண்டாம், நிறைய அம்மாக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் மீனாக்ஷி. <br /><br />அம்மாவும் மனிதர் தானே? 'சனியனே' என்று பசிக்கு அழும் பச்சைப்பிள்ளையை அடித்துப் புடைக்கும் தாய் செயலின் பின்னே வறுமையும் இயலாமையும் புரிந்தாலும் செயலின் அறியாமையை நாம் பின்னணியை வைத்துப் பார்ப்பதால் தவறுகளை மறந்து விடுகிறோம். சனியனே என்று கணவனை அடிக்க மாட்டாள் - காரணம் பத்தினி தர்மம். அதே பத்தினி என்னவோ பிள்ளையை செருப்பால் அடிக்கவும் தயங்க மாட்டாள். <br /><br />ஒரேயடியாக, 'தவறே செய்ய மாட்டாள் தாய்' என்பதெல்லாம் எம்ஜிஆர் பாட்டுக்கு ஒத்து வருமே தவிர நடைமுறை உண்மை கிடையாது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-28638508640428641582011-05-26T22:36:58.234+05:302011-05-26T22:36:58.234+05:30பிரிய மீனாக்ஷி மேடம்! என்னவென்று சொல்ல.. உங்கள் கூ...பிரிய மீனாக்ஷி மேடம்! என்னவென்று சொல்ல.. உங்கள் கூர்ந்த பார்வையை , நுட்பமான மனவியல் கூறுகளின் அலசலை ஆச்சரியத்துடனும்,<br />வியப்புடனும் நோக்குகிறேன்.<br /><br />இந்தக்கதையை படித்து ,லயித்துப் பாராட்டிய அன்பு நெஞ்சங்கள் உங்களின் பின்னூட்டத்தையும் கண்டபின் தான் இந்தப் பதிவு முழுமையுறும் எனத் தோன்றுகிறது.<br /><br />இந்தப் பதிவிற்கு தேவையில்லை என் நான் ஒதுக்கிய, கல்யாணியினுடனான ஒரு சின்ன உரையாடலை இங்கு சொல்லத் தோன்றுகிறது. <br /><br />"சொல்லு மோகி! என் ஞாபகம் இருக்கா?"<br /><br />"சின்ன வயசில் உடன்பழகியவர்களை அப்பப்போ நினைக்காம இருக்கமுடியுமா கல்யாணி ?"<br /><br />"உன் மாதிரி அப்பப்போன்னு எனக்கு இருக்க முடியயாதேடா?"<br /><br />"என்ன சொல்ற?"<br /><br />"உன் பதிஞ்ச பல்லு என்னோடதானே இருக்கு!"<br /><br />வெளுத்து சிரித்த என் பள்ளிக்கால தோழியின் பார்வையைத் தவிர்த்தேன்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-76329553660104879592011-05-26T22:21:50.458+05:302011-05-26T22:21:50.458+05:30சாய்! உங்கள் அழகான பின்னூட்டத்தை பலமுறைப் படித்தேன...சாய்! உங்கள் அழகான பின்னூட்டத்தை பலமுறைப் படித்தேன். அதுவே ஒரு கதைத்துணுக்கின் அடர்த்தி பெற்றிருக்கிறதே!<br /><br />எல்லோருமே கொஞ்சம் ரிவர்ஸ் கியரில் ரொம்பதூரம்தான் வந்து விட்டோம் சாய்!<br /><br />உங்கள் பாராட்டை ஒரு அன்புத்தம்பியின் மென்தழுவலாய் ஏற்றுக் கொள்கிறேன்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-34697229942533629752011-05-26T22:16:25.621+05:302011-05-26T22:16:25.621+05:30அன்பு அப்பாதுரை! நானும் உங்களைப் போலவே நினைத்தேன்....அன்பு அப்பாதுரை! நானும் உங்களைப் போலவே நினைத்தேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91826401487042517592011-05-26T04:48:36.607+05:302011-05-26T04:48:36.607+05:30இளமை கால நினைவுகளை அசை போடுவது ஒரு சுகம் என்றால், ...இளமை கால நினைவுகளை அசை போடுவது ஒரு சுகம் என்றால், அதை இது போல நமக்கு ஒத்த ரசனை உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ளுவது அதை விட சுகம். <br />'கடிக்கு சூடு'. எனக்கென்னவோ இது கல்யாணியின் மனதில் ஒரு நியதியாக இருந்திருக்காது என்று தோன்றுகிறது. சூடு வைத்துவிடுவேன் என்று ஒரு தாய் பயமுறுத்துவாலே தவிர, வைக்க மாட்டாள். குழந்தை பருவத்தில் உங்களுக்கு சூடு வைத்ததும் கொக்கரித்த அவள் மனம், பின் அதற்காக மிகவும் வருந்தி இருக்க கூடும். நாள்பட மனதில் இருந்த அந்த வருத்தமும், நடந்ததிற்காக உங்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க இயலாத நிலையும் சேர்ந்து, அதே போன்ற ஒரு நிகழ்வு நடந்தவுடன், ஒரு வேகத்தில் எடுத்த முடிவின் அடையாளம்தான் இந்த பூமாவின் சூடு என்று நினைக்கிறேன். தன்னை விட, தன் குழந்தைக்கு ஒன்று என்றால்தான் ஒரு தாய் மிகவும் அதிகமாக உருகுவாள். எனவே இதை கல்யாணி தனக்கு தானே கொடுத்து கொண்ட தண்டனையாகவும்தான் நினைத்திருப்பாள். நீண்ட வருடங்களுக்கு பிறகும் உங்களை 'மோகி' என்று அழைத்ததும், தன் மகளிடமும் உங்களை 'மோகி' என்றே அறிமுகபடுத்தி இருந்ததும் அவர்கள் மனதில் உங்கள் மேல் இன்னமும் உள்ள அன்பு கலந்த நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.<br /> <br />மனதை உருகவைத்த அழகான, யதார்த்தமான பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-62381042651836495492011-05-23T03:47:00.135+05:302011-05-23T03:47:00.135+05:30//‘பாஸிங்க்ஷோ’ சிகரெட் அட்டை இரண்டு அந்தக் கட்டின்...//‘பாஸிங்க்ஷோ’ சிகரெட் அட்டை இரண்டு அந்தக் கட்டின் கறுப்பாடுகளாய் எதிராளிக்கு கையிருப்பைக் காட்டிக் கொடுத்தது// -<br /><br />அழகு மோகன்ஜி. எத்துனையோ கல்யாணங்களில் எங்கள் குடும்பத்தில் அப்பா, சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், கசின்ஸ் என்று சீட்டு ஆடும் காட்சிக்கு எடுத்து சென்றீர்கள். <br /><br />என் குடும்பத்தில்<br /><br />- "எட்டை தொட்டிடின் கிட்டிடும் வெற்றி";<br />- "வேண்டுமென்றே - மகா கணபதிம்" என்று ஒரு வார்த்தையை மட்டும் கடுபெடுத்த பாடும் என் கஸின் !";<br />- "ஏலே, நான் பீஷ்மர் மாதிரி - நீங்கள் எல்லாம் என் அண்ணன் / தம்பி பசங்கட. உங்கள்கிட்டே தானே தோற்க்கரேன்" என்று சால்ஜாப்பு சொல்லும் என் கடைசி சித்தப்பா;<br />- பலதடவை பகடை ரங்கன் என்று பேர் எடுத்த என் அப்பாவிடமோ அல்லது அவரை போலேவே சீட்டுக்கட்டில் வெளுத்து வாங்கும் என்னிடமோ, என் தம்பிகளிடமோ காசை பறிக்கொடுத்தபின் "டூ மினிட்ஸ் தனியே வர முடியுமா" என்று கேட்கும் ஒரு சித்தப்பன் !<br /><br />//“ருக்மணி மாமீ ....” வாசலில் நீதிகேட்டு பெரும்பசு மணியடிக்கிறதே!// <br /><br />சூப்பர்<br /><br />முடிவு அருமை. மனதில் பதியும் நினைவுகள்<br /><br />சுந்தர்ஜி அவர்கள் சொன்னதுபோல் - மனது முப்பத்தைந்து வருடம் பின்னோக்கி செல்ல நினைத்தது உண்மை.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-1787453637184950302011-05-22T17:14:34.861+05:302011-05-22T17:14:34.861+05:30கல்யாணியின் பார்வையில் சொல்லப் பட்டிருந்தால் கதையி...கல்யாணியின் பார்வையில் சொல்லப் பட்டிருந்தால் கதையின் வலியில் நேசம் இருந்திருக்குமா தெரியவில்லை, ஆனால் பிரமாதமான உள்கண்ணாடித் திருப்பம் கிடைத்திருக்கும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com