இவனுமொரு நீலகண்டன்.
அமிர்தம் கடைகிறார்கள் எனக்
கேள்வியுற்று,
ஓடு நிறைய அமிர்தம் எனும் ஆவலோடு,
பாற்கடல் கரையதிர ஓடி வந்தவன்.
கடைந்தார்கள்.
கடைந்தார்கள்.
கட்சிகட்டிக் கொண்டு கடைந்தார்கள்.
வெளிவந்த ஐராவதமும் உச்சஸ்ரவைஸும்
இவனுக்கு லட்சியமில்லை
கௌஸ்துபமும் கற்பகத்தருவும்
கௌஸ்துபமும் கற்பகத்தருவும்
ஒரு பட்சமுமில்லை.
ஓர் ஓடளவுக்கு அமிர்தம் போதும்.
சிலுப்பிசிலுப்பி கடல் நுரைத்தது.
ஆர்ப்பரித்து அலைபுரண்டு கடல் வரண்டது.
கருமைசூழ்ந்து ஓலமெங்கும் அதிர்ந்தவேளை,
அமிர்தம் கிடைக்காதென்று தெரிந்து போனது
ஆலாலம் திரண்டெழுந்து கையில் விழுந்நது.
விரக்தியிலே நஞ்சையவன் உண்ணலானது.
கண்டம் பற்றி மிடறுநிறுத்திய உமை அறியாள்.
ஓரவஞ்சனையாய் அமுதம் பகிர்ந்த மால் அறியான்.
அண்டம் போற்ற தேவர்முனி என்றா ரும் அறியார்.
ஓடொன்றே அறியும் தியாகேசன் உள்ளக் கிடக்கை.
உச்சியிலே என்றுமிங்கே மீளாத்தனிமை.
வரம்தந்து வரம்தந்து சலித்த பெருமை.
ஈடேறா விருப்பங்களே ஈசன்நிலைமை.
கங்கையென்ன சக்தியென்ன அதே வெறுமை.
(பட உதவி: கூகிள் )
ஓர் ஓடளவுக்கு அமிர்தம் போதும்.
சிலுப்பிசிலுப்பி கடல் நுரைத்தது.
ஆர்ப்பரித்து அலைபுரண்டு கடல் வரண்டது.
கருமைசூழ்ந்து ஓலமெங்கும் அதிர்ந்தவேளை,
அமிர்தம் கிடைக்காதென்று தெரிந்து போனது
ஆலாலம் திரண்டெழுந்து கையில் விழுந்நது.
விரக்தியிலே நஞ்சையவன் உண்ணலானது.
கண்டம் பற்றி மிடறுநிறுத்திய உமை அறியாள்.
ஓரவஞ்சனையாய் அமுதம் பகிர்ந்த மால் அறியான்.
அண்டம் போற்ற தேவர்முனி என்றா ரும் அறியார்.
ஓடொன்றே அறியும் தியாகேசன் உள்ளக் கிடக்கை.
உச்சியிலே என்றுமிங்கே மீளாத்தனிமை.
வரம்தந்து வரம்தந்து சலித்த பெருமை.
ஈடேறா விருப்பங்களே ஈசன்நிலைமை.
கங்கையென்ன சக்தியென்ன அதே வெறுமை.
(பட உதவி: கூகிள் )