சொந்தங்களே ! எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியிட சற்றே தாமதமாகி விட்டது. இந்தத் தொகுப்பில் பல கதைகள், எனது 'வானவில் மனிதன்' வலைப்பூவில் வெளிவந்து பரவலான கவனமும் பாராட்டும் பெற்றவை.
தொகுப்பில் மொத்தம் 21 சிறுகதைகள். 160 பக்கங்கள். கடந்த பல வருடங்களில் பல்வேறு காலகட்டங்களில் எழுதப் பட்டவை.
வலைப்பூவில் வெளியான கதைகளுக்கு வந்த சில கருத்துக்களையே 'சிரம் கண்ட அட்சதைகள்' என்று அணிந்துரைக்கு பதிலாக சேர்த்திருக்கிறேன். இவற்றை மீண்டும் கண்ணுறும் போது, கால இயத்திரத்தில் பின்னோக்கி சென்று, அற்றைநாள் உணர்வுகளில் மீண்டும் திளைத்தேன். இந்தக் கதைகள் என்றைக்குமான மானுட மாண்பையும், உணர்வுநிலைகளையும் பேசுவதாய் உணர்கிறேன்.
அக்ஷரா பிரசுரம் வெளியீடாக தரமான காகிதத்தில் நேர்த்தியாக வெளியிட உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. விலை ரூ 125/-
இந்தப் புத்தக விற்பனையில் வரும் தொகை முழுவதையும், ஒரு புனிதமான பணிக்கு அளிக்க உத்தேசம்.
முகவரியை மெசஞ்சரிலோ, என் மின்னஞ்சலிலோ(mohanji.ab@gmail.com)
தெரிவியுங்கள். புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.
இந்தத் தொகுப்புக்கு வந்திருக்கும் விமரிசனங்களும் பாராட்டுகளும் ஊக்கம் அளிக்கின்றன.முகநூலில் வந்த சில விமரிசனங்கள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இவர்கள் யாவருக்கும் என் அன்பும் நன்றியும் உரியது.
இனி விமரிசனங்கள்
ரிஷபன் அவர்களின் விமரிசனம்
https://www.facebook.com/rishaban.srinivasan/posts/1695009223847119
கரந்தை ஜெயக்குமார் அவர்களின் விமரிசனம்
https://www.facebook.com/permalink.php?story_fbid=464689763878921&id=100010137039512
ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் விமரிசனம்
https://www.facebook.com/permalink.php?story_fbid=465397750474789&id=100010137039512
தோழர் காஸ்யபன் அவர்களின் விமரிசனம்
https://www.facebook.com/permalink.php?story_fbid=465830343764863&id=100010137039512
ஶ்ரீராம் அவர்களின் விமரிசனம்
https://www.facebook.com/permalink.php?story_fbid=460054264342471&id=100010137039512
முனைவர் ஹரணி அவர்களின் விமரிசனம்
https://www.facebook.com/permalink.php?story_fbid=467870340227530&id=100010137039512
எட்டு பதிவுகளாக இந்தப் புத்தகத்தை விமரிசித்து வரும் பிரபல பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணனின் முயற்சி வண்ணமயமானது. கதைகளின் சாரத்தை சொல்லிச் செல்லும் நடையும், பொருத்தமான படங்களும் மனம் கவர்பவை. எனக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் சகோதரரே!
கோபு சாரின் விமரிசனங்களின் சுட்டிகள் இதோ:
இந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2017/06/1-of-8.html
இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2017/06/2-of-8.html
இந்தத்தொடரின் பகுதி-3 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2017/06/3-of-8.html
இந்தத்தொடரின் பகுதி-4 க்கான இணைப்பு:
https://gopu1949.blogspot.in/2017/06/4-of-8.html
இந்தத்தொடரின் பகுதி-5 க்கான இணைப்பு:
https://gopu1949.blogspot.in/2017/06/5-of-8.html
இந்தத் தொடரின் பகுதி-6க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2017/06/6-of-8.html?m=1
இந்தத்தொடரின் பகுதி-7 க்கான இணைப்பு:
இந்தத்தொடரின் பகுதி-8 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2017/06/8-of-8.html
(பகுதி 7 ம் 8ம் 16/6/2017 அன்று இணைக்கப் பட்டன.)