கனவில் வந்த சீடன்
காலையில் வந்த கனவில்
என் காலருகே அமர்ந்திருந்ததோ
என் காலருகே அமர்ந்திருந்ததோ
சுந்தர்ஜி....
'உப்புமாவுக்கு கடுகைவிடுத்து
'உப்புமாவுக்கு கடுகைவிடுத்து
எள்ளைத் தாளித்திருக்கிறாய்'என்று
.திருகிக் கொண்டிருக்கிறேன் அவன் காதை.
திரிகடுகம் செய்யுள் சொல்லவா? என்கிறான்.
ஐம்பதாச்சு...தாளிக்கத் துப்பிருக்கா? எனத் திருகலைக் கூட்ட,
'நீங்கள் தானே நான்' எனக் கள்ளம் தொனிக்கா பதில்...
திருகின காது வலிக்காதோ... சிரிப்பைப் பொசுக்க....
தொலைக்காட்சி உயிர்பெறுகிறது.
'சிறந்தவர் குருமார்களா? சீடர்களா?' எனப் பட்டிமன்றம்.
பாரதிபாஸ்கர் என் கட்சியைப் பேசுமுன்னேயே கைதட்டுகிறர்கள்.
'சிறந்தவர் சீடர்களே' என
சுந்தர்ஜியைப் பார்த்து சிரிக்கும் சாலமன் பாப்பையா.
சேனல் மாற்றிப் போட்டால் அங்கே தலைப்போ
'தாளிக்க உகந்தது கடுகா எள்ளா?'
கெட்டவார்த்தை சொல்வதுபோன்ற வாயசைப்பில் திண்டுக்கல் லியோனி...
'கடுகா இருந்தா என்ன, எள்ளா இருந்தா என்ன,
போட்டதத் தின்னுட்டு பொழப்பப் பாருங்க' என்கிறார்.
புவ்வாக்கு அர்ப்பணம்னா கடுகு,
அவ்வாக்கு தர்ப்பணம்னா எள்ளு
என்றார் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி;
'காதை விட்டால் யூடியூப் கேட்பேன் குருஜி' எனும் சுந்தர்ஜி ;
சீடர் செவிகளை விடாதீர் என்றார் பரமார்த்தகுரு;
இதையே கவிதையாக முகநூலில் போடச் சொன்னார் ரிஷபன்;
'பன்னிரண்டு லைக்குக்கு இந்தப்பாடா?'என்றபடி என் காது திருகப்பட்டது.
பின்னே கோபமாய் மீசைதுடிக்க நின்றிருந்தான்
முண்டாசுக்காரன்....
.
முதுமை
முதுமை
பாடமுயன்றால் தொண்டை வலிக்கிறது.
தூக்க முயன்றால் கை(வலது) வலிக்கிறது.
அதேபோல்,
குனியமுயன்றால் இடுப்பும்,
குதிக்கமுயன்றால் காலும்,
திருப்பும் போதெல்லாம் கழுத்தும்,
வலிக்கின்றன.
எதையும் முயலாமலே,
வலித்துக் கொண்டேயிருக்கும் .....
மனசு மட்டும்.
அதேபோல்,
குனியமுயன்றால் இடுப்பும்,
குதிக்கமுயன்றால் காலும்,
திருப்பும் போதெல்லாம் கழுத்தும்,
வலிக்கின்றன.
எதையும் முயலாமலே,
வலித்துக் கொண்டேயிருக்கும் .....
மனசு மட்டும்.






