ஆச்சு! இன்னுமொரு ஆண்டு கடந்தபடி இருக்கிறது.. வயது ஆகஆக
புதுவருடங்கள் சின்ன தடுமாற்றத்தோடு கலந்த எதிர்பார்ப்பைத்தான் தருமோ?
வழக்கம்போலே இந்த வருடப்பிறப்பு சமயத்திலும் சபரிமலைக்கு விரதம் இருந்தபடி இருக்கிறேன்! ஆண்டவன்மேல் பாரம் போட்டுவிடுவது வசதியாகத் தான் இருக்கிறது!
2015முடியுமுன் நான்கு
புத்தக வெளியீடுகளை செய்துவிட வேண்டுமென்று மஞ்சள்துணியில் நாலணா முடித்து
வைத்திருந்தேன்.. வெள்ளத்தின்மேல் பழியைப் போட்டுவிட்டு வரும் வருடத்தில் வெளியிட்டுவிட
உத்தேசம்.
ஆங்கிலவருடப் பிறப்புதொறும் ஏதேனும் சிலஉறுதிகளை எடுத்துக்கொண்டு அவற்றில்
பெரும்பாலும் நிறைவேற்றிவிடுவது என் வாடிக்கை.
2016க்கான என் உறுதிகள் :
1.ஆன்மிகம்
சம்பந்தமான பதிவுகளை இடுவதற்கு ஒரு புதிய
வலைப்பூ
தொடங்க வேண்டும்.
2. கம்பராமாயணம்
முழு ரிவிஷன் செய்ய வேண்டும்
3. ஹிமாலய
யாத்திரை
4. சிறு
குறிப்புகளாக உள்ள பல சிறுகதைகளையும் பதிவேற்ற வேண்டும்.
5. பாதியில்
நிற்கும் நாவலை முடிக்க ஆசை.
6. புதியதாய்
வாங்கி இன்னமும் படிக்காத 14 புத்தகங்கள்,
உறையை விட்டு
எடுக்காத ஒலிஒளிவட்டுக்கள் முடியும்வரை புதியவை
வாங்குவதில்லை.
7. அடுத்த
பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.
8. இன்னமும்
மூன்று விருப்பங்கள் கொஞ்சம் பெர்சனல். என் கதை எதிலாவது
தலைகாட்டினால் பார்த்துக் கொள்ளுங்கள்.
என் பதிவுலக சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமே விளைக!
போனசாக, முகநூலில் இன்று இட்டிருந்த சிறுபதிவொன்றை கீழே தந்திருக்கிறேன்.
புதுவருடத்தில் இவற்றில் சிலவற்றை நாம் கைகொள்ள இயலாதா என்ன?? அன்பு....
மனப்பக்குவம் என்பது....
1.. பிறரை மாற்றும் முயற்சிகளைக் கைவிட்டு, தன்னை
சூழலுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ள முயலுதல்.....
சூழலுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ள முயலுதல்.....
2. பிறரை அவர்கள் உள்ளபடியே ஏற்றுக்
கொள்ளுதல்.....
3. அவரவர் நோக்கில் அவரவர் சரியே எனும் நிதர்சனத்தை புரிந்து
3. அவரவர் நோக்கில் அவரவர் சரியே எனும் நிதர்சனத்தை புரிந்து
கொள்ளுதல்......
4. நிகழ்ந்ததை அதன் போக்கில்விட கற்றுக் கொள்ளுதல்....
5 .உறவுகளில் எதிர்பார்ப்புகளை ஒதுக்கி, நாம் அளிப்பதை,
அளித்தல் தரும் ஆனந்தத்துக்காகவே அளித்தல்.....
4. நிகழ்ந்ததை அதன் போக்கில்விட கற்றுக் கொள்ளுதல்....
5 .உறவுகளில் எதிர்பார்ப்புகளை ஒதுக்கி, நாம் அளிப்பதை,
அளித்தல் தரும் ஆனந்தத்துக்காகவே அளித்தல்.....
6. நாம் எதைச்
செய்தாலும் அதை நம் திருப்திக்காகவே செய்தல்....
7. நாம் எவ்வளவு திறமையானவர்கள் என்று உலகத்திற்கு நிறுவ
7. நாம் எவ்வளவு திறமையானவர்கள் என்று உலகத்திற்கு நிறுவ
முயல்வதை விடுத்தல்....
8.பிறரோடு நம்மை எப்போதும் ஒப்பீடு செய்யும் வீண்செயலை
8.பிறரோடு நம்மை எப்போதும் ஒப்பீடு செய்யும் வீண்செயலை
நிறுத்தல்....
9. நம் தனிமையான கணங்களில் நம்முடனே நாம் அமைதியாய்
9. நம் தனிமையான கணங்களில் நம்முடனே நாம் அமைதியாய்
இருக்க முற்படுதல்.....
10.நம் சந்தோஷத்தை ‘பொருட்களுடன்’ பொருத்திக்
10.நம் சந்தோஷத்தை ‘பொருட்களுடன்’ பொருத்திக்
கொள்ளுவதை அறவே நீக்குதல் ...
11. தேவைக்கும் நம் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை
11. தேவைக்கும் நம் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை
உணர்ந்து விருப்பங்களின் மேல் பற்றை ஒழித்தல்.,
(புத்த லாமா)