ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010

விக்ரம் “அம்பி” கோச்சுண்ட மேட்டர்

A Slovenian 711 series trainபட உதவி Image Wikipediaநன்றியுடன் 


நமது இந்திய ரயில் பெட்டிகளில் நூறு வருஷத்துக்கு முன் கழிவறைகளே இல்லாமலிருந்தது தெரியுமா?
சிலநாட்களுக்கு முன் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் சொல்லும் சுவாரஸ்யமான நிகழ்வைக் கேளுங்கள்.
 அகில் சந்திர சென் என்பவர் சாஹிப்கஞ்ஜ் டிவிஷன் ரயில்வே ஆபீசுக்கு கழிவறை இல்லாத அவஸ்தைப் பற்றி ஒரு கடிதம், தப்பும் தவறுமாய்,மொத்தமும் பிழைகளுடன் எழுதினார்
அதை ஆங்கிலத்திலேயே கீழே தருகிறேன்
'I am arrive by passenger train Ahmedpur station and my belly is too much swelling with jackfruit. I am therefore went to privy. Just I doing the nuisance that guard making whistle blow for train to go off and I am running with lotah in one hand and dhoti in the next when I am fall over and expose all my shocking to man and female women on platform. I am got leaved at Ahmedpur station. This too much bad, if passenger  go to make dung that dam guard not wait train five minutes for him. I am therefore pray your honor to make big fine on that guard for public sake. Otherwise I am making big report to papers.'
இந்தக் கடிதம் இன்னமும் தில்லி ரயில்வே காட்சியகத்தில் இருக்கிறதாம். இந்தக் கடிதத்தில் மலிந்துள்ள பிழைகள் தவிர வேறு என்ன அதற்கு சரித்திர முக்கியத்துவம் இருக்கிறது என்கிறீர்களா? இந்தக் கடிதம் தான் ரயில் பெட்டிகளில் கழிப்பறை வசதிக்கு அடிகோலியதாம். அடுத்த முறை ரயில் கழிப்பறையுள் நுழையும் போது ,மூக்கை மூடிக் கொள்ளாமல், அகில் சந்திர சென் தாத்தாவுக்கு ஜே என்று ஒரு  சவுண்டு விடுங்க.

  



  
Enhanced by Zemanta

25 comments:

அப்பாதுரை சொன்னது…

சவுண்டு வுடலாம்னு பாத்தா நாத்தம் கொமட்டப் புடுங்குதுங்க உள்ற போவ முடியல... அதுக்கு எதுனா லெட்டரு எழுதி வக்கணுமா?

a சொன்னது…

கழிவறைக்குள் இப்படி ஒரு மேட்டரா??? ம்... புதிய செய்தி...

பெயரில்லா சொன்னது…

(1) ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அந்த நபர் ஆங்கிலேயர்களுக்கு உரைக்கும் படி எழுதியிருக்கிறார். எழுதியவரின் தாய் மொழி ஆங்கிலம் அல்ல. அந்தக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் குறைவு.

(2) தமிழ் தாய்மொழியாகக் கொண்டு ஆங்கிலக் கலப்பில் இப்படி ஒரு பதிவு போட்டுக் கொண்டு நீங்கள் அடுத்தவரை கிண்டல் செய்கிறீர்கள். நேரம்!

பத்மநாபன் சொன்னது…

மோகன்ஜி, அந்த அவஸ்தையொட அவஸ்தையா எழுதி இருப்பாரு சென்னு. விட்டா நம்மளையும் கொலை பண்ணிருவாரு சென்னு ன்னு சீக்கிரம் கழிவறை சான்க்ஸ்ன் பண்ணியிருப்பார்கள்.

( ஞொய்யாளு ரொம்ப கடி கடியா வர்றாரு ஜி .. தப்பிச்சு சிக்கிரம் பதிவு போட பார்க்கிறேன் )

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்,சென் எழுதினது வெள்ளைக்காரனுக்கு! நீங்க லெட்டரை நம்மாளுக்கு தானே எழுதணும். எதுவும் மாறப் போறதில்லை..நம்ம மூக்குக்கும் பழகிடும்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க வழிப் போக்கன்சார்,அப்பப்ப வாங்க.வருகைக்கு நன்றி

மோகன்ஜி சொன்னது…

திரு பெயரில்லா, இந்தப் பதிவு ஆங்கிலத்தின் மேன்மையைப் பற்றி அல்ல. ஒரு கடிதம் உருவாக்கிய மாற்றம் பற்றி நகைச்சுவையாக சொல்லப் பட்டது. இந்த நகைச்சுவை ஆங்கிலத்தில் இருந்ததால் ஆங்கில கலப்புடன் எழுத நேர்ந்தது. கலப்புடன் தமிழ் எழுதினால் என் தந்தை கோபிப்பது மாதிரியே இருந்தது உங்கள் பின்னூட்டம். வருகைக்கு நன்றி

மோகன்ஜி சொன்னது…

வாங்க பத்மநாபன்.. மேல பார்த்தீங்கள்ள ? ஒரு அண்ணன் ஆங்கிலக் கலப்புக்கு திட்டிட்டாரு.நியாயமான திட்டு. அடுத்த பதிவிலிருந்து நிறைய இலக்கியம் பேசலாம்னு இருக்கேன்.(உள்ளே உறங்கிக் கிடந்த தமிழ் சிங்கத்தை உசுப்பேத்தி விட்டுட்டாரு)தயாரா இருங்க சொல்லிட்டேன்!

RVS சொன்னது…

அம்பி .... டீ................டீ...........................ஆஆஆஆ...................... ரர்ர்ர்ர்.............. என்று சவுண்ட் விடறார்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மா சொன்னது…

jokes apart ...
இது நிஜமாவே புதிய தகவல் தான் ...
நிஜமாவே அவருக்கு தேங்க்ஸ் சொல்லணும் ..

சாய்ராம் கோபாலன் சொன்னது…

இந்த தாத்தாவை இன்னும் பல நூறு வருடங்களுக்கு எப்படி ஆங்கிலத்தில் எழுத சொல்லி இருந்தால் ஆகஸ்ட் பதினைந்து 1947 வரை காத்து இருக்க தேவையில்லை !! மவுண்ட்பேட்டன் தாத்தாவும் தன் மனைவியை காப்பாற்றி இருப்பார் !!

பெங்களூரில் இருந்து ஒரு முறை சென்னை வரும்போது முன்பதிவு செய்த பெட்டியில் தான் வந்தேன் (பெங்களூர் மெயில்). ஒரு கல்லூரி மாணவன் - என்னவோ தீ அணைப்பு அதிகாரி போல் கதவின் வாசலில் நின்றுக்கொண்டு ரயில் கக்குஸில் பிஸ் அடித்தான் - அதுவும் கதவை திறந்து வைத்துக்கொண்டே !!

வந்ததே கோவம், நேரே பின்பக்கத்தில் எட்டி உதைத்தேன். அப்படியே தவறி கக்குஸில் விழ தெரிந்தான். "டே நாயே, வீட்டில் பிஸ் நடு ஹாலில் அடிப்பியா - இல்லே இப்படி தான் நின்றுக்கொண்டே அடிப்பியா" என்று பயங்கர டோஸ். சாரி சார், சாரி சார் என்று வழிந்தான். அந்நியன் படம் வருவதற்கு முன்பே நல்ல அம்பியாக்கும் நான் !!

நம் மக்கள் மாக்கள். நடு ரோட்டில் வேஷ்டியை துக்கி பிஸ் அடிக்கும் அரசியல்வாதிகள் நம்மை ஆட்சி செய்யும் வர்கத்தை சேர்ந்த சாதாரண குடி மக்கள் !!

- சாய்

சாய்ராம் கோபாலன் சொன்னது…

Correction - "இந்த தாத்தாவை இன்னும் பல நூறு வருடங்களுக்கு "எப்படி" ஆங்கிலத்தில்" as "இந்த தாத்தாவை இன்னும் பல நூறு வருடங்களுக்கு "இப்படி" ஆங்கிலத்தில்"

மோகன்ஜி சொன்னது…

வாங்க RVS,அம்பி ஒரு ஜீவனுள்ள காரக்டர். நீங்க கருட புராணம் முழுதும் படிச்சிருக்கீங்களா ? அது பத்தியும் ஒண்ணு பதியலாம்னு இருக்கேன்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க பத்மா. வாழ்க்கை முழுக்க இது மாதிரி சின்ன சின்ன நன்றிகள் நிறைய பேருக்கு நாம சொல்லிகிட்டே இருக்கணும்ங்க.

மோகன்ஜி சொன்னது…

வாங்க சாய்,உங்க அனுபவத்தை சுவையா எழுதியிருக்கீங்க.போற போக்குல மவுன்ட்பாட்டன் தாத்தாவுக்கு ஒரு இடி வேறு.கலக்குறீங்க!

vinthaimanithan சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்

மோகன்ஜி சொன்னது…

வாங்க நண்பரே ! ஒரு ஒத்துமையப் பாத்தீங்களா?நம்ம ரெண்டு பேருமே "மனுஷ"ப் பய புள்ளைக!?நானு "வானவில் மனிதன்",நீங்க விந்தை மனிதன்!சேந்து சொக்கப்பனை
கொளுத்தலாம்!.

பொன் மாலை பொழுது சொன்னது…

சில நேரங்களில் சில நிகழ்வுகள் தாமதமாகி விடுவது வழக்கம். புரிந்தால் சரி. :)

Aathira mullai சொன்னது…

கழிவரைக்கு அஸ்திவாரம் போட்ட அந்த கர்ம வீரரை வணங்குவோம்..
தகவல் மைந்தனையும் வணங்குவோம்...

அப்பாதுரை சொன்னது…

மட்டும் பெயரை ஏன் மறைத்து விடுகிறார்கள்? தமிழ்ப் பதிவில் ஆங்கிலம் சேர்க்காதே என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே? பதிவுலகில் வானவில் மனிதரும் உண்டு; விசித்திர மனிதரும் உண்டு போல!

Ramesh சொன்னது…

புதிய தகவலாக இருந்ததுங்க...நன்றி

மோகன்ஜி சொன்னது…

சுக்கு-மாணிக்கம்,நெஜம்மா புரியல்ல தல!

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆதிரா உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார், வாழ்க்கையே விசித்திரம் தானே! உங்கள் கதையை சற்றுமுன் கூட நினைத்துக் கொண்டேன்.

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கு நன்றி ரமேஷ்!