வெள்ளி, ஜூலை 09, 2010

பழைய கவிதை....புதிய சங்கடம்

என் உயிர் நண்பனின் மகன், கல்லூரி மாணவன் தொலைபேசியில்..

‘அங்கிள் ! உங்க புது தமிழ் BLOG பாத்தேன்.
லே அவுட்டுல்லாம் அட்டகாசமா இருக்கு.
மொத்த BLOGம் தமிழ்லன்னா கஷ்டமில்லையா?’

‘இதுல என்னடா கஷ்டம்? அப்பல்லாம் மோட்டுவளைய
பாத்துகிட்டு பேப்பர்ல எழுதினோம்.. இப்போ கீபோர்ட
பாத்துகிட்டு தடவி தடவி டோக்கு டோக்குன்னு’....

‘ அதுல உங்களோட கவித ஒண்ணு படிச்சேன். சிம்பிளாதான் இருக்கு. ஆனா லாஜிக்கு தான் இடிக்குது’...

ஆஹா.. கெளம்பிட்டாங்கய்யா.....

‘என்ன கவிதைடா செல்லம்?’

வாசிக்கிறான் அதை.

தலையணைத் தொட்டில்

அவள்
கடிதத்தில் மட்டுமே
அவனைக் கலந்ததற்கு

நெஞ்சிலே கருவுற்று
கண்ணால் ஈன்றாள்
இருதுளி கண்ணீர்.

இவ்விரட்டைக் குழந்தைகளை
இட்டதோ
இந்தத் தலையணைத் தொட்டிலில்.

தபால்கார புரோகிதரே !
எவ்வளவு தாமதமாய் வந்திருக்கிறீர்?

( மார்ச் 1981)


‘இதுல என்னடா புரியறதுக்கு இருக்கு?’


‘கொழந்த பிறக்கறதையும் மனசு பீலிங்க்சையும்
வச்சு ஏதோ லவ் மேட்டர் சொல்ல வர்றீங்க.
உங்க லவ்ஸ் தானே? அப்பா சொல்லியிருக்காரு’

டேய்.. விஷயத்துக்கு வாடா’..

‘ ஏன் லெட்டர் லேட்டாச்சுன்னு அவ்ளோ கஷ்ட படணும்?’
அப்பப்ப ஒரு நடை போய் பாக்க வேண்டியதுதானே?’

“நான் இருந்தது பெங்களூர்ல... அவ சென்னையில...”

“லெட்டர் லேட்டாவுதுன்னா கொரியர்ல அனுப்பலாம்ல?’

‘அப்போ கொரியர்லாம் கிடையாதுடா..’...

இல்லைன்னா செல்லுல பேசவேண்டியது தானே?
S.M.S ஆவது அனுப்பலாம்ல?

‘செல்லுல்லாம் அந்த காலத்துல கிடையாதுடா’.....

‘சரி போவுது.. S.T.D போட்டு பேசியிருக்கலாமே.’

“அப்பா சாக்ரடீசு! லாங் கால் அப்பல்லாம் பேசறது ரொம்ப கஷ்டம். டிரங்கால் போட்டு பேசணும் .அவங்க வீட்ல போன் வேற கிடையாது. இன்னும் கேள்வி இருக்கா? இவ்ளோதானா”

கொஞ்ச நேரம் பேச்சில்லை மறுமுனையில்.... அப்புறம் சொன்னான் பாக்கணுமே......
‘எதுவுமே கிடையாது... சுத்தம் !
அப்போ எதுக்காக தண்டமா லவ் பண்ணீங்க.?’

“மக்கு.. போடா! அதெல்லாம் உனக்குப் புரியாது!”

‘எனக்கெல்லாம் புரியும்... என்னா பீலிங்கு ?
பாவம் ஆண்ட்டிக்குத் தான் உங்களைப் பத்தி புரியல்ல..’

‘டேய்...டேய்....’
.

2 comments:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஹா .. ஹா.. அண்ணா இப்ப பசங்கெல்லாம் ரொம்ப பாஸ்ட்...

எப்படியெல்லாம் கலாயிக்கிறான்...

பெயரில்லா சொன்னது…

பையனோட பேச்சு.. ஒரு கவுண்டமணி ஜோக்கை நினைவு படுத்துது நண்பரே..