புதன், ஜூலை 07, 2010

விறகும் நெய்யும்

குளிர்காய எண்ணியிருந்த
விறகுகள் ....
குளித்தன தணல் மேடையில்.

எதிர்பார்ப்புகள் சடசடத்த பின்னர்
எஞ்சியதங்கே சாம்பல் சரங்கள்.

தீயிலே நெய்யுருக்கி
அதனையே
தீவளர்க்க வார்த்தார்கள்.

விறகுகளோ சாம்பலாயாவது எஞ்சியது....
நெய்யோ வெறும் வாசமாய்க் காற்றில்