புதன், ஜூலை 14, 2010

மறுமுகம்

ஆட்களில்லாச் சாலைகள்
ஆனாலும்,
அளவில்லா கூக்குரல்கள் ......

தெருவோரத் திண்ணைகள்
துணையற்ற வாழ்க்கை.......

பொருமுகின்ற நெஞ்சின்,
புலப்படா இரைச்சல்கள் .

முதுகினில் உறுத்தும் கண்பார்வைகள்..
முகம் காட்டாத சகபிரயாணிகள்....

உருவம் மறைத்த கெக்கலிப்புகள்..
இருளில் மின்னும் கத்தியின் வீச்சொலிகள்

தேடுகின்றேன் மனிதர்களை...
யாருக்கு யாரைத் தெரியும்?

ஆட்களில்லாச் சாலைகள்
ஆனாலும்,
அளவில்லா கூக்குரல்கள் ......


( கல்கத்தா 1987)