புதன், ஜூலை 07, 2010

என் கவிதைகள்

என் சிந்தனையும் சீற்றமும்
கனவும் காதலும்
இயந்திரங்களின்
இச்சைக்குட்பட்டு
அச்சாகி,
பலரின் கண்களும்
எச்சிற் படுத்தாமல்
முழுமையாய்,
ஒருமையாய்
உனக்கே நிவேதனம்.


(சென்னை 1977)