வியாழன், ஜூலை 01, 2010

முத்தம்

அதர ஏர்கள்
உழுத கன்னம் ...
மதுர வயலாய்
காதல் விளைய
இதர வேர்கள்
விட்டுப் போகும்...


இன்னொரு முத்தம்

என் கன்னப் பூங்காவில்
முத்தப் பூ மலரும் நேரம்...
அன்பே !
உதடுகளைப் பிரிக்காதே!

(மார்ச் 1983)