வியாழன், ஜூலை 15, 2010

சீக்கிரம் வா !

உன் உதட்டின் ஈரத்தில்
உயிர்ப்பயிரை வளர்த்தேன்
நெஞ்சமுகட்டின் வெம்மையில்
கண்வளரக் கற்றேன்.
உன் புன்னகையின் வெளிச்சத்தில்
வாழ்வினைப் படித்தேன்.
மடிதனில் தலைவைத்து
மௌனத்தை ரசித்தேன்.

இன்றோ
சிறியதோர் பிரிவில்,
நானோர் வெறுமையின் அகராதி.
தனிமையின் மறுபதிப்பு
இறுக்கத்தின் இலவச இணைப்பு .

என்னவளே !
எப்போது வருகிறாய்?
திறந்தேயிருக்கும் என் இமைப்பூட்டின் சாவி,
உன்னிடம் தானே இருக்கிறது?

சீக்கிரம் வா !
நான் உறங்க வேண்டும்.
உன் மடியில் இமை மூடி
அமைதியில் கரைய வேண்டும்.


(சென்னை 1981)

1 comments:

vidhyaavenkat சொன்னது…

yavuru adhi?