வியாழன், ஜூலை 01, 2010

தலையணைத் தொட்டில்

அவள்
கடிதத்தில் மட்டுமே
அவனைக் கலந்ததற்கு

நெஞ்சிலே கருவுற்று
கண்ணால் ஈன்றாள்
இருதுளி கண்ணீர்.

இவ்விரட்டைக் குழந்தைகளை
இட்டதோ
இந்தத் தலையணைத் தொட்டிலில்.

தபால்கார புரோகிதரே !
எவ்வளவு தாமதமாய் வந்திருக்கிறீர்?

( மார்ச் 1981)