புதன், ஜூலை 07, 2010

என்றேனும் ஓர் நாளில்

என்றேனும் ஓர் நாளில்

நெருஞ்சிக் காடாய் நெஞ்சில் மண்டிவிட்ட
இனம்தெரியா துயரங்கள்
குறிஞ்சி மலராய் என்றோ ஒரு நாள்
நம் சந்திப்பு மலரும் போது.....
அகன்று விடும்...
மன ரணங்கள் ஆறி விடும்

மலர்ந்த உணர்வுகள்
மறையுமுன்னர்
ஒருமுறை சொல்லிவிட்டுப் போ !
குறிஞ்சி மலர்வது என்றோ ஓர் நாளென...


(சென்னை 1978)