புதன், ஜூலை 07, 2010

அவன்-அவள்

அவனும் அவளும்
அவனுக்காய் அவளும்,
அவளுக்காய் அவனும்,

அவனால் அவளும்
அவளால் அவனும்…..

அவனே அவளும்
அவளே அவனும்

ஆனார்கள்.........

இன்றோ,

அவன் அவளில் அவளையும்,
அவள் அவனில் அவனையும்,

தேடி ஓய்ந்த பின்னர்......

அவன் அவனே தான் !
அவளும் அவளே தான் !!


கல்கத்தா 1984