வியாழன், ஜூலை 01, 2010

பிரார்த்தனை

ஆண்டவனே !
வாழையிலையில்
அன்னமும் புளிக்குழம்பும் இட்டு
வயிரடைக்கத்தான் வழியில்லே.

வெத்தலையில்
சுண்ணாம்பும் பொகயலையும் வச்சு
வாயடைக்கவாவது வழி செய்யேன்.

(ஜூலை 1983)