வியாழன், ஜூலை 01, 2010

யுகங்கள் கடந்து...

மொழிகள் பிறப்பதற்கு முன்னமே
நாமிருவரும் பிறந்து விட்டோம்.
இன்னமும்,
மௌனத்தைக் கண்டு என்னடி பயம்?

உன் இமை முடிகளின் எண்ணிக்கை
நானறிவேன்.
என் கண்களை விடவா வாய்க்குத் தெரியும்?
இன்னும் மௌனத்தைக் கண்டு என்னடி பயம்?

பேசியதெல்லாம் போதும்.
சின்ன சின்ன வார்த்தைகள்.....
காதல், அன்பு, பாசம்.....
யாருக்கிவை வேண்டும்?


மெல்லத்தான் என் முகவாயை
கைகளில் ஏந்திக் கொள் .
என் முகத்தில் விழும் உன்
குழல் கற்றைகளை ஒதுக்காதே.

பார்க்க முடிந்தால்
என் கண்களைப் பார்.

பேதைப் பெண்ணே !
இன்னும் மௌனத்தைக் கண்டு என்னடி பயம்?


( ஆகஸ்ட்1982)