புதன், ஜூலை 07, 2010

புதுக் கவிஞன்

குயர் குயராய் பேப்பரும்
கோப்பை சில தேநீரும்

பலமணி நேரங்களும்
பத்துவிரல் நகங்களும்
போயாயிற்று.

விடிவதற்குள் ஒரு கவிதை
எழுதி விடுவேன் கண்டிப்பாய்.

( சென்னை 1974)