புதன், ஜூலை 14, 2010

மொழி

புரியும்படி நான் சொன்ன போது,
போதும் போதும் என்றார்கள்.

புரிந்தும் புரியாதவையாய் சொல்லியதை,
புதிர் புதிர் என்றார்கள்.

புரியாமலே அவை ஆன போது,
கவிதை கவிதை என்றார்கள்.

மௌனத்திலே நான் முடித்த போது,
மரணம் மரணம் என்கிறார்கள்.


(கடலூர் 1995)