புதன், ஜூலை 07, 2010

உலகம் கெட்டுப் போச்சு

தகிக்கும் பேருந்து
அனல் பகல் பயணம்.
அமட்டும் கண்கள்.

பின்னிருக்கையிலிருந்து
முகமில்லாத ஓர் குரல்.

‘உலகம் கேட்டுப் போச்சுய்யா’

உண்மை !
கயமை, ஊழல், விரோதம்,
பொறாமை, வன்முறை,
சோரம், சுயநலம்,
பித்தலாட்டம்.......

பொய்மையின் அச்சிலே
சுழலும் இவ்வுலகம்....

ஆம்

உலகம் கெட்டுப் போச்சு...
ரொம்பவே கெட்டு போச்சு...

ஒல்ட்டான்... ஓட்டுனரே !

சுற்றும் உலகை நிறுத்து !

நான் இறங்கிக் கொள்கிறேன்..


(கல்கத்தா 1984)

2 comments:

பெயரில்லா சொன்னது…

நல்ல கவிதை...

மோகன்ஜி சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி ஆதித்த கரிகாலன். உங்கள் கலர்நிலம் படைப்புகள் நேர்த்தி.அதில் பின்னூட்டம் இட முடியவில்லையே..ஏன்?