புதன், ஜூலை 14, 2010

அங்கலாய்ப்பு

சேற்றுச் சகதியிலே
சாக்கடை ரோட்டிலே,
நடக்கேன்
செருப்பில்லா காலோடே ....

மழிக்காத முகத்தினிலே
முப்பது நாள் தாடியோடே........

நல்ல சட்டைப் பேண்ட்டில்லே
நாலு முழ கருப்பு வேட்டி

மூணு நாளா
அலமேலுவும் ‘வீட்டில்’ இல்லே.....
நான் வச்சக் குழம்பிலோ
உப்புமில்லே சப்புமில்லே....

சாமி சரணம் சாமி சரணம்
இன்னிக்கு பூஜை செய்ய டயமில்லே.......