புதன், ஜூலை 07, 2010

பிலாக்கணம்

உறவுகளின் பெயரால் ஊடுருவல்கள்
இரவுகளின் இணக்கங்களுக்காய் .........

பாச வியாபாரங்களின் பங்கீடுகள்....
நீச நெஞ்சங்களின் மூலதனமாய்.

வேஷங்கள் கலைத்த ராஜாக்கள்,
வேண்டுவதந்தோ கூலியைத்தான்.

உண்மைகள் செய்து கொண்ட தற்கொலை
ஊமைக் கனவுகளின் கலக்கங்களுக்காய்.

ஊடே புகுந்த ஒட்டகங்கள்
உரிமை போன கூடாரத்துக்காய்.......

ஓடுகின்ற மேகங்கள் விட்டுச்செல்லா
சுவடுகளில்.....
எதிர்பார்ப்பின் துணையோடு பின்தொடர்ந்தே
தேடல்கள்.

காலம் சொல்லமுடியாத பதில்களுக்காய்
காத்திருக்கிறோம்......
அதுவரை அதுவரை நிதமும் இங்கே,

இருளில் பொய்மையின் ஓலங்கள்.


( சென்னை 1978)