புதன், ஜூலை 07, 2010

கோடை மழை

மழைமுத்து வார்த்தைகளை
சரங்களாய்ச் சொரிந்து
வான் கவிஞன்
மண் வாசக இதயங்களைத் தீண்டும் நேரம்,....

சந்த மின்னல்களிடை கருத்து இடிமுழக்கம்.
உணர்வுச் சாரல்களில்
உள்ளப் பூரிப்புகள் .

மழை நின்றும் அடங்கா மண்வாசனை.
மழை வெறும் நிகழ்வன்று...

துளிர் விடும் துடிப்பிற்கும்,
துணைக் காட்டும் ஆளுமைக்கும்
மழையோர் தொடர்புத் தூது.

கவிஞனே!
உன் பொறுப்போ வான்மட்டு.

கவிமழையில் துளிர்க்கட்டும்,
எதிர்காலத்தின் நம்பிக்கைகள்...

மழை நின்றும் அடங்குவதில்லை
மண்வாசனை.

(சென்னை 1974)