புதன், ஜூலை 07, 2010

உடன் கட்டை

புகையிலைப் பெண்ணே !
வெள்ளைத்தாள் சேலை கட்டி
முனை நெருப்பில் நீ கனியும் போது,
வாயாலும் மூக்காலும்
உன் சிதையை புகைய விட்டு
தவணை முறையில்
உடன்கட்டை ஏறுகின்ற
எங்களுக்கும்
கற்புண்டு.


(கல்கத்தா 1984)