புதன், ஜூலை 07, 2010

வேள்வி

என்னிலிருந்து உன்னை
கால இடைவெளிகள் பிரித்து விடவில்லை.

சந்திப்புகள் நம்வரை ஓர் சம்பிரதாயம்....

உன்னை நினைப்பதுண்டோ எனக் கேட்கிறாய்.
பூந்தோட்டக்காரன் பூ வாங்குவதில்லை

நினைவுகள் நம்வரை ஓர் சம்பிரதாயம்.....

நாம் பேசிக்கொள்வதேயில்லை என்கிறாய்.
சந்திரோதயம் ஒரு மௌன நாடகமே

சம்பாஷணை நம்வரை ஓர் சம்பிரதாயம்.....

உனக்கான என் கவிதைகளோ ......
சம்பிரதாயமல்ல ....
அது
உயிர் பெய்து வளர்க்கும் வேள்வித்தீ.

(சென்னை 1982)