வியாழன், ஜூலை 15, 2010

உயில்

அசையும் சொத்துக்கள்
அன்பு மகனுக்கு,
அசையா சொத்தெல்லாம்
உடனிருந்த மனைவிக்கு..
கடனிருந்தால் கண்டிப்பாய்ச்
கடவுளுக்கு சேரட்டும்.

சொச்சமின்றி வாழ்ந்து விட்டேன்
மிச்சம் மீதி ஏதுமுண்டோ ?

எஞ்சியவையோ.....
என் புத்தகங்களும் கவிதைகளும்.
இருக்கட்டும்.
யாருக்கவை வேண்டும்??
அவற்றையெல்லாம்
என்னோடே புதைத்திடுங்கள்.

3 comments:

பெயரில்லா சொன்னது…

Om

பெயரில்லா சொன்னது…

எனக்கு ஏதும் உண்டா?

vidhyaavenkat சொன்னது…

what is my share